Friday, March 26, 2010

உபதேசம்


...வதிரி.சி.ரவீந்திரன்

சாதியால் குறைந்தவனை
காதலித்த மகளுக்கு
காதலை மறக்க
பைபிளில்சத்தியம் கேட்கிறார் தந்தை.
பைபிளின் உள்ளடக்கம்
"எல்லோரையும் ஒன்றாய் நேசி".

சில்லறைகள்


...வதிரி.சி.ரவீந்திரன்

நாங்கள் சில்லறைகள்
அவருக்கு;
எங்கள் தொழிற்சாலையில்
மகான் நினைவுக்கு
உண்டியல் குலுக்குகிறார்
விழுகின்ற சில்லறைகள்
நாங்கள்தான்!

அறிவு


.....வதிரி.சி.ரவீந்திரன்

எங்கள் ஊரின்
வீடுகள் எங்கும்
மின்விளக்குகள்
ஒளிர்கின்றன....
ஆனால்-எங்கள்
ஊர் இன்னும்
இருளில்தான்!!!!!

Monday, March 22, 2010


பேதம்

---வதிரி சி. ரவீந்திரன்

குடிசைக்குள்ளே
குழந்தைகள் கூடிப்
பசியால் அழுதன.
மாடியின் முன்னே
அரிசிமூடைகள் 'லொறி'யால் இறங்கின.

புகழ்






---வதிரி சி. ரவீந்திரன்

எட்டுச் சிகரம் கட்டி
என்றும் எடுப்பான திருவிழாக்கள்.
ஆண்டவன் சந்நிதியோ
அழியும் நிலையில் ...

பிரிவு



---வதிரி சி. ரவீந்திரன்

எனது ஊரில்
இரண்டு சமாதான நீதவான்கள்
இப்போ
எனது ஊர் இரண்டு